தமிழக நதிகள் இணைப்புத்திட்டம் – River linking in Tamil Nadu.

0

______________________________________________________

திமுக ஆட்சியில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டு துவக்கப்பட்ட, தாமிரபரணி – கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத்திட்டம் நான்கு கட்டங்களாகச் செயல்படுத்த 369கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, பணிகளும் நடந்தவண்ணம் இருந்தன.
திடீரென நான்குநேரிவரை நெருங்கிய இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு 5166 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இவையாவும் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. தமிழக அரசின் நேற்றைய பட்ஜெட் நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு வெறும் 253கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீடு போதுமான நிதியும் இல்லை. மத்திய அரசும் இந்தப் பிரச்சனையில் கண்டும்காணாமல் இருக்கின்றது. இத்திட்டம் கேள்விக்குறியாகத் தான் இருக்கின்றது.

#River_linking_in_Tamilnadu

#KSR_Posts

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons