பாரதி (பாஞ்சாலி சபதம்)
போரினில் யானை விழக்கண்ட – பல
பூதங்கள் நாய்நரி காகங்கள் – புலை
ஓரி கழுகென்றிவை எல்லாம் – தம
துள்ளம் களிகொண்டு விம்மல்போல் – மிகச்
சீரிய வீமனைச் சூதினில் – அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும் – நின்று
மார்பிலும் தோளிலும் கொட்டினார் – களி
மண்டிக் குதித்தெழுந்தாடுவார்…
– பாரதி
(பாஞ்சாலி சபதம்)






